புதுதில்லி, மார்ச் 4– குடிநீர் சேமிப்பு குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் மக்களவையில் எழுப்பிய கேள் விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள் ளார். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மக்களவையில் எழுப்பிய கேள்வி விவரம் வருமாறு, உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குளங்களில் குடிநீர் சேமித்து வைப்ப தற்கான திட்டங்கள் ஏதேனும் அரசி டம் உள்ளதா? ஆம் எனில் அதன் விவ ரங்கள் என்ன?. இல்லை எனில் அதற் கான காரணங்கள் என்ன?. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பியி ருந்தார். இதற்கு மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ராவ் இந் தர்ஜித் சிங் அளித்த பதிலில், நாடாளு மன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட விதிமுறைகள், உள் ளூர் தேவைகளின் அடிப்படையில், நீடித்த சமுதாய சொத்துக்கள் உரு வாக்குதலுக்கு வழி கோலும் விதங்க ளில் குடிநீர் வசதிகளும் அடங்கும். நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அனுமதியளிக்கப்பட்ட திட்டங்க ளின் பட்டியல், முழுமையாக இல்லா விடினும், குறிப்பாக, இதற்கான, விதி முறைகள் 4 ஆவது இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, குளங்களில் குடிநீர் சேமிப்பதை ஒரு குறிப்பிட்ட பொருளாக மேற்படி பட்டி யலில் சேர்க்கும் தேவை எதுவும் உண ரப்படவில்லை என தெரிவித்தார்.