பாக்பாத்:
ஆவணி மாதத்தை வடமாநிலங்களில் சிரவண மாதம் என்றுஅழைக்கிறார்கள். இந்த மாதம் சிவனுக்கு உகந்த மாதம் என்றும்,சிரவண மாதத்தில் கங்கை நீரைகாவடியாக சுமந்துசென்று சிவனுக்கு அபிஷேகம் செய்தால் தங்களின் வாழ்க்கையில் நன்மை நடக்கும் என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சிரவண மாதத்தில், காவடிகள் விற்பனையும் அமோகமாக இருக்கும். விஷேசம் என்னவென்றால், இந்தகாவடி தயாரிப்பில் இஸ்லாமியர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் தயாரித்துத் தரும் காவடிகள் மூலம்தான் சிவபக்தர்கள் நீண்டகாலமாக அபிஷேக நீரைச் சுமந்து செல்கிறார் கள். இதில் இவ்வளவு காலமும்எந்தப் பிரச்சனையும் எழுந்ததில்லை.இந்நிலையில்தான், விஎச்பி அமைப்பின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பிராச்சி, உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பாத் மாவட்டத்திற்கு உட்பட்ட தாகா என்ற ஊரில் பேசும்போது, மதவெறுப்பை விதைத்துள்ளார்.
“சிரவண மாதத்தில் இந்துக்களுக்கு காவடிகளை விற்று, இஸ்லாமியர்கள் லாபம் அடைகின்றனர். நமது நம்பிக்கையை ஏற்காதவர்கள் லாபம் அடைவதற்கு நாமேஉதவக் கூடாது.எனவே, ஹரித்துவார் போன்ற புனித யாத்திரைக்குக் காவடி எடுத்துச் செல்லும் இந்துக்கள் யாரும் இஸ்லாமியர்கள் தயாரித்த காவடியை வாங்கக் கூடாது.இந்து மதத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கை இருப்பவர்கள், இஸ்லாமியர்கள் தயாரித்துத் தரும்காவடிகளை அடியோடு புறக்கணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.