tamilnadu

img

நாடு முழுவதும் ஏழைகளைக் காப்பாற்றிட இருப்பிலுள்ள தானியங்களை விநியோகித்திடுக!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, மார்ச் 18- நாடு, மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுத்து நிறுத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாலும், அதன் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்கனவே பெரும்பான்மையான ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்க ளைக் கடுமையாக பாதித்திருப்ப தாலும், மத்திய அரசாங்கம் இருப்பி லுள்ள தானியங்களை பொது விநி யோக முறையில் ஏழைகளுக்கு விநி யோகம் செய்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட் டுள்ள அறிக்கையில் மேலும் கூறி யிருப்பதாவது:

நாட்டில், சுற்றுலாத்துறை, கட்டு மானத்துறை, போக்குவரத்துத் துறை போன்ற பல துறைகளி லும் வேலைகள் ஸ்தம்பித்திருப்ப தால், அவற்றில் தினக்கூலியாக இருந்துவந்த முறைசாராத் தொழி லாளர்கள் ஊதியமின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக் கிறார்கள். இதேபோன்று வீதிகளில் வியாபாரம் செய்வோர், சிறிய கடைக் காரர்கள், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக் கிறார்கள். இவை இப்பகுதி மக்களின் மத்தியில் பசி- பஞ்சம் - பட்டினிக் கொடுமைகளையும், போதிய சத்து ணவு உட்கொள்ளாத நிலைமை யையும் அவற்றின் காரணமாக நோய்  எதிர்ப்பு சக்தி இவர்கள் மத்தியில் குறையக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உணவு தானிய ஒதுக் கீடுகளை அதிகரித்திட வேண்டி யது அவசியமாகும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யும் தானியங்களை இலவசமாக அளித்திட வேண்டும். அவற்றை மாநில அரசுகள் தேவைப் படும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். மத்திய அரசு தற்போது 7.5 கோடி டன் உணவு தானியம் (பிப்ரவரி 1 கணக்கீட்டின்படி) இருப்பு வைத்திரு க்கிறது. இப்போது இவற்றை கிடங்குகளில் உள்ள எலிகள்தான் தின்றுகொண்டிருக்கின்றன.   

இவற்றை வெளிக்கொணர்ந்து இலவசமாக வழங்கி, ஏழை மக்க ளைப் பாதுகாத்திட மத்திய, மாநில  அரசுகள் முன்வராவிட்டால், அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மிகவும் எளிதாக ஆளாகிவிடுவார்கள். மத்திய அரசு, நாடு முழுதும் உள்ள ஏழை மக்களைப் பாது காக்கும் விதத்தில் அவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, தன்னுடைய கிடங்குகளிலிருந்து உணவு தானியங்களை விடுவித்திட வேண்டும் என்று அரசியல் தலை மைக்குழு வலியுறுத்துகிறது.

(ந.நி.)