ஆடி மாதம் தொடங்கியதைத் தொ டர்ந்து, சென்னை தியாகராய நகரில் தள்ளுபடி விலையில் பொரு ட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
பிளஸ்-2 மாணவர்களின் மதிப் பெண் பட்டியலை தயார் நிலை யில் வைத்திருக்க தலைமையா சிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தர விட்டுள்ளது.
இணையவழியே மருத்துவ ஆலோ சனைகளைப் பெறும் இ-சஞ்சீ வினி திட்டத்தின் கீழ் இதுவரை 6,471 பேர் பயனடைந்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்ட ருக்கு 78.37 ரூபாய் என விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது.
துனிசியா நாட்டின் பிரதமர் எலிஸ் பக்பாக் பதவியிலிருந்து விலகி யுள்ளார். அவர் தனது ராஜினாமா கடி தத்தை அதிபர் கைஸ் சையத்திடம் அளித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவையை நடை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை மீட்கும் அரசின் முயற்சியில் தொழில் நிறுவனங்களும் இணைய வேண்டும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் தொழில்துறைக்காக வழங்கப்பட்ட கடனின் பங்களிப்பு 31.5 சதவீதமாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரயிலை கவிழ்க்கும் நோக்கில், விருத்தாச்சலம்-முகாசபரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் இரும்புத் தூண் வைத்தவனை துரிதமாக கைது செய்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் வெள்ளிக்கிழமையன்று காலை தனிவிமானம் மூலம் சென் றார். லடாக் எல்லையில் மேற் கொள்ள பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். அவ ருடன் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே ஆகியோரும் சென்றனர்.