நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான சகாய ஆன்றணி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களியலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்எஸ் ஆர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் ஆர்.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராஜாதாஸ் ஆகியோர் பேசினர். களியல் வட்டாரகுழு உறுப்பினர்கள் ராஜேந்தி ன், சசி, விஸ்வநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.