புதுதில்லி:
தில்லியில் சங்-பரிவாரங்கள் நடத்திய வன்முறைக்கு பலியானவர் களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 44 பேர், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேர், லோக் நாயக் மருத்துவமனையில் 3 பேர், ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒருவர் என சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆயுதசட்டத்தின் கீழான 47 வழக்குகள் உள்பட மொத்தம் 654 வழக்குகள், தில்லிவன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள் ளன. ஆயிரத்து 820 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.