tamilnadu

img

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தில்லி பாஜக தலைவர்...

சோனிபட்:
நாடு முழுவதும் 4-ஆம் கட்டமாக பொதுமுடக்கம் அமலில்இருக்கிறது. கூட்டம் கூடக்கூடாது; தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது மே 31-க்கும் பின்னரும் நீட்டிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, பொதுமுடக்க விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் ஷேக்புரா நகரில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் விளையாட்டு போட்டிகள்நடைபெற்ற நிலையில், அதில்,பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் தில்லி பாஜக தலைவருமான மனோஜ் திவாரி கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதன்மூலம் அவர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.ஆனால், பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கங்களைதிறக்க உள்துறை அமைச்சகம் அனுமதித்து இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே தான் அங்கு சென்று விளையாடியதாகவும் மனோஜ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.

;