புதுதில்லி, ஜூலை 15-
தில்லிப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில இதழியல் பாடத்திட்டம், ஆர்எஸ்எஸ்-எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கிறது என்று ஆட்சேபணை கிளப்பப்பட்டிருக்கிறது.
தில்லிப் பல்கலைக் கழக அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் ராசல் சிங், பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில இதழியல் பாடத்திட்டம் (syllabus of English Journalism), உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த கலவரங்களையும், அங்கே குண்டர் கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கின்றன என்றும், இவை ஆர்எஸ்எஸ் இயக்கம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகள் குறித்து மோசமான சித்திரத்தைத் தீட்டும் விதத்தில் இருக்கின்றன என்றும் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக இயங்கும் ஊடகங்களில் வந்தவை என்றும், அரசாங்கத்தையும் பிரதமரையும் விமர்சனத்திற்கு உட்படுத்துபவை என்றும் எனவே இதனை நீக்கிட வேண்டும் என்றும் திங்கள் கிழமையன்று நடைபெற்ற அகாடமிக் கவுன்சில் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால், ஆங்கிலத்துறைத் தலைவர், பேராசிரியர் ராஜ் குமார், இது தொடர்பாகக் கூறுகையில் தங்கள் துறையானது எந்த மதப் பிரிவினருக்கும் ஊறுவிளைவிக்கக்கூடாது என்பதில் உறுதியான நிலை எடுத்திருக்கிறது என்றார். மேலும் இப்பிரச்சனை ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றும் பல்கலைக்கழக வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.
(ந.நி.)
இ,