திருவனந்தபுரம்:
கேரளத்தால் நோய் பரவல் உச்சகட்டத்தை எட்டுவதை தாமதப்படுத்த முடிந்தது. அதன் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்பட்டது. சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும் வாயப்பு கிடைத்தது. கேரளத்தின் மரண விகிதம் குறைந்து வருகிறது என முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நோயாளிகளின்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதைஇது காட்டுகிறது. அண்டை மாநிலங்களில் இந்த நோய் தொடர்ந்து பரவி வருகிறது.உள்ளாட்சி அமைப்பின் கீழ் முதன்மைபராமரிப்பு மையங்கள், பல்லாயிரக்கணக் கான படுக்கைகள், ஆய்வகங்கள் மற்றும் கோவிட் மருத்துவமனைகள் உள்ளன. சரியான திட்டமிடல், நோயாளிகளுக்கான சிகிச்சையை எளிதாக்கியது. இறப்பு குறைவதற்கான காரணம், திட்டத்தின் சிறப்பும், சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பும், கடினஉழைப்பும் தான். மே மாதத்தில் கேரளாவில் இறப்பு 0.77 சதவீதமாக இருந்தது. இதுஆகஸ்டில் 0.45 சதவிகிதம், செப்டம்பரில் 0.37 சதவிகிதம் என குறைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு இறப்பு 0.22 சதவிகிதம் மட்டுமே. நோய் உச்சத்தை அடைவதற்கு எடுக்கும் நேரம் நீடிப்பதாலும், அதற்கிடையில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவ தாலும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.அண்டை மாநிலங்களில் கேரளாவை விட பத்து மடங்கு இறப்புகள் அதிகம். நிபுணர்கள்கூறியது போல், இப்போது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். சுகாதார ஊழியர்கள் எட்டு மாதங்களாக அயராது உழைத்து வருகின்றனர். அவர்கள் சோர்வாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் தேவைப்படும் கட்டமாகும் இது. அவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும். அவர்களின் ஆலோசனையை உண்மையில் பின்பற்ற வேண்டும். நோய் பரவாமல் தடுக்க நாம்ஒன்றாக நிற்க வேண்டும். அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.கோவிட் படைப்பிரிவில் 18,957 பேர் பதிவு செய்தனர். இவர்களில் 9325 பேர் மருத்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள். அதில் 543 எம்பிபிஎஸ் மருத்துவர்கள் உள்ளனர். இந்த நிலையில்அதிகமான மருத்துவர்களின் சேவைகள் அவசியம். மேலும் மருத்துவர்கள் கோவிட்படைப்பிரிவில் பதிவு செய்ய வேண்டும். சேவை என்பது நாட்டுக்கு இன்றியமையாத ஒன்றாகும். நோய் பரவாமல் தடுக்க மக்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு முழுமையாக ஒத்துழைக்கின்றன, தொடர்ந்துஅதைச் செய்ய வேண்டும். ஆனால் வெளியேசெல்வவர்களில் 10 சதவிகிதம் பேர் முககவசம்அணிவதில்லை. இது கெடுவாய்ப்பாகும். முககவசம் அணிவது மிக முக்கியமானது. முககவசம் அணிபவர்களில் நோயின் தீவிரம் குறைகிறது. தொடர்புடைய ஆய்வுகள் இதைக் காட்டுகின்றன. எல்லோரும் முக கவசம்அணிவது கட்டாயமாகும்.
கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களில் சுமார் 30 சதவிகிதம் பேரில், அறிகுறிகள் சில காலம் நீடிக்கும் என்று ஆய்வுகள்காட்டுகின்றன. அவர்களில் பத்து சதவிகிதம் பேருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன. குழந்தைகளில், தீவிரம் குறைவாக உள்ளது, ஆனால் மற்றொரு சிக்கல் உருவாகிறது. கோவிட் வந்து போனபிறகும் கூட, சிலருக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன. ஆரம்பத்தில் காட்டப்பட்ட விழிப்புணர்வை இன்னும் தீவிரமாக மீட்டெடுக்க வேண்டும். இது தடுப்புக்கான ஒரு சிறந்த வழி என்பதை அங்கீகரிக்க வேண்டும்.கோவிட் கிருமிகள் தோலின் மேற்பரப்பில் ஒன்பது மணி நேரம் வரை நீடிக்கும்.அதனால்தான் பிரேக் தி செயின் பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும். அதுதான் சிறந்தவழி. சாலையோரங்களிலும், சந்தைகளி லும், கடைகளிலும் மக்கள் கைகளைக் கழுவவசதி செய்ய வேண்டும். நெரிசலான இடங்களில் கை கழுவவும், கிருமிநாசினி பயன்படுத்தவும் வசதிகள் வழங்கப்பட வேண்டும். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஏற்பாடுநோய் பரவாமல் தடுக்க உதவும். பலமாவட்டங்களில், ஆட்சியர்களின் தலைமையில் புதுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தலையீடுகளை மாநிலம் முழுவதும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்என முதல்வர் கூறினார்.