திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்கு களினால் உண்டாக்கப்படும் தேவையற்ற கழிவுப் பொருட்களாகும். தொழிற் புரட்சிக்கு முன்னால் இயற்கையிலேயே மக்கும் தன்மையு டைய வீட்டுக்கழிவுகளும், விவசாயக் கழிவுகளும் மட்டுமே இருந்தன. மக்கள் தொகை குறைந்தும், கட்டாந்தரைகள் மிகுந்தும் இருந்ததால் திடக் கழிவுகளை எளிமையாக அகற்ற நகர்ப்புற திறந்தவெளிகளிலும் பூமியில் ஆங்காங்கே குழி தோண்டி கொட்டவும் அக்காலத்தில் முடிந்தது. ஏனெனில் அவை இயற்கையிலேயே மக்கக் கூடிய தன்மையுடையது. தொடர்ந்து முறையற்ற வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளினால், மண்ணில் திடக் கழிவுகளின் அளவு அதிகரிப்ப தோடு மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கைத் தன்மையும் மாற்றப்பட்டு விட்டது. இதைத் தொ டர்ந்து கிராமத்தில் வீட்டுக்கழிவு மற்றும் விவசாய கழிவுகளும், நகரத்தில், தொழில் உற்பத்தி பொ ருட்களும், விஷத்தன்மை வாய்ந்த அபாயகர கழிவு களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் கழிவுகளில் உள்ள பொ ருட்களை அடையாளம் கண்டு நீண்ட நாட்கள் இருக்கும் தன்மையற்றவைகளை வெளியே எறி வதோ அல்லது சேகரித்தோ வைக்க வேண்டும். உதாரணமாக மிட்டாய்களை பயன்படுத்தும் வரை மேல் உறைக்கு ஒரு மதிப்பு உண்டு. பயன்பாட்டிற் குப் பின்னர் தூக்கி எறியப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கழிவும் வெவ்வேறு வகையில் வெளி யேற்றப்படுகிறது. கழிவுகளின் உற்பத்தி பருவ கால நிலைகளைப் பொருத்தும், உணவுப் பழக்கவழக்கங்கள், வியாபார நடவடிக்கைகள் போன்றவைகளைப் பொருத்தும் அவைகளின் அளவுகளும் தன்மைகளும் மாறுபடும்.
ஒவ்வொரு நாளும் 1 லட்சம் மெட்ரிக் டன்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2000 ஆண்டில் செய்த ஆய்வுகளின்படி முதல்நிலை நகரங்களில் சராசரியாக 1 நாளைக்கு 1 நபர் மூலம் 0.4 கி.கி. கழிவு உற்பத்தியாக்கப்படுகிறது. மற்ற நகரங்களில் 0.2 கி.கி. அளவு உள்ளது. நகரமயமாவதலினால் கழிவுகளின் அளவு அதிகமாக உற்பத்தியாக்கப்படுகிறது. இந்திய நகர மக்கள் தொகை தற்போதுள்ள 25 விழுக் காட்டிலிருந்து 60 விழுக்காடாக 2025இல் அதிக ரிக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 1 நாளைக்கு ஏறக்குறைய 1,00,000 மெட்ரிக் டன் நகர திடக்கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 2000இல் 40 விழுக்காட்டில் இருந்த கரிம கழிவு 2025இல் 60 விழுக்காடாகவும், 4 விழுக்காட்டில் இருந்த பிளாஸ்டிக் 6 விழுக் காடாகவும், 1 விழுக்காடில் இருந்த உலோகம் 4 விழுக்காடாவும், 2 விழுக்காட்டில் இருந்த கண்ணாடி 3 விழுக்காடாகவும், 5 விழுக்காட்டில் இருந்த காகிதம் 15 விழுக்காடாகவும், மற்றவை (சாம்பல், மணல், கல்துகள்கள்) 4.7 விழுக்காட் டில் இருந்து 12 விழுக்காடாகவும் குப்பைகளின் அளவு மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
எத்தனையெத்தனை கழிவுகள்...
வீட்டுக் கழிவுகள், வணிகக் கழிவுகள், நிறுவ னக் கழிவுகள், நகரக் கழிவுகள், மட்கும் குப்பை கள், சாம்பல் கழிவு, கழிவுக் கப்பிகள், பெரிய அள விலான கழிவுகள், தெருக் கழிவுகள், இறந்த விலங்கு கழிவுகள், கட்டுமானம் மற்றும் இடி பாட்டுக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், இறைச்சிக் கூட கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உயிரிய மருத்துவக் கழிவுகள் திடக் கழிவுக ளாகும். பொதுவாக இவை சமைத்தல், சுத்தம் செய்தல், பழுது பார்த்தல், பழைய துணி, பழைய புத்தகம், செய்தித்தாள், பழைய தட்டுமுட்டு சாமான்கள் போன்றவைகளால் வீட்டுக் கழிவுகள் உண்டாகிறது. அலுவலகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், பண்டக காப்பகங்கள் (குடோன்) மற்ற வணிகத் துறை சார்ந்த பிரிவு கள் மூலம் வெவ்வேறு கழிவுப் பொருட்கள் உண் டாகிறது. குப்பைகள், கழிவுக் கப்பிகள் மற்றும் அபாயகரக் கழிவுகள் போன்றவை பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவ னங்கள் போன்றவைகள் மூலம் வெளியா கின்றன. இறந்த உயிரினங்கள், வியாபாரக் கழிவு கள், பயன்படுத்தப்படாத வாகனங்கள் மூலமும் கழிவுகள் உண்டாகின்றன. வீடுகளிலும், தொழிற் கூடங்களிலும், எரிக்கும் மரம் மற்றும் நிலக்கரி போன்றவற்றால் ஏற்படும் சாம்பல்களும், செங்கல், உலோகம் மற்றும் கண்ணாடி தொழிற்சாலைக ளின் மூலம் பெறப்படும் சாம்பல் கழிவுகளும் குறிப்பிடத்தக்க கழிவுகளாகும்.
கழிவுக் கப்பிகள்
விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் அனைத்தும் மக்கும் குப்பைக ளாகும். வீடு, வணிகவியல் நிறுவனங்கள் போன்ற இடங்களில் உருவாக்கப்படும் குப்பைகளும், சாம்பலும் அல்லாத திட நிலையில் உள்ள மக்காத கழிவுகளே கழிவுக் கப்பிகள் எனப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு குறிப்பாக வீட்டுச் சாமான்கள், வாகன உதிரி பாகங்கள், மரம், நவீன குளிர்சாதனப் பெட்டி மற்றும் சலவை இயந்திரங்கள் போன்றவை பெரிய அளவிலான கழிவுகளாகும். குப்பைகளை நகரங்களில் கொட்ட நக ராட்சி தடைவிதித்துள்ளது. மாநில அரசால் ஒதுக் கப்பட்ட இடங்களில்தான் கொட்ட வேண்டும். தடையை மீறி குப்பைகளைக் கொட்டுவதாகப் புகார்கள் வந்தால் அதன்மேல் தக்க நடவடிக்கை யை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். வீடு களில் உண்டாகும் கழிவுகளைக் குறிப்பிட்ட நேரங்களில் வரும் நகராட்சி குப்பை வண்டிக ளில் கொட்ட வேண்டும். விடுதி உணவகம், அலுவ லகம், வணிக வளாகக் கழிவுகளை தனியாகப் பிரித்து அகற்ற வேண்டும். மாமிசக் கடை மற்றும் மீன், காய்கறி, பழக்கடை கழிவுகள் இயற்கை யாக மக்கக் கூடியவை என்பதால் இவைகளை தனியாக சேகரித்து மக்க வைத்து உரமாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயிரிய மருத்துவக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகராட்சி திட கழிவுகளுடன் சேர்க்காமல், இதற்காக தனியாக வகுத்துள்ள விதிமுறைக ளைப் பின்பற்றி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். தெருக்களில் திரிகின்ற விலங்குக ளை குப்பைகள் கொட்டியுள்ள இடங்களில் அனு மதிக்கக் கூடாது. திடக் கழிவுகளை அகற்றும் போதும் அவற்றைக் குறிப்பிட்ட இடத்தில் கொட்டும் போதும் அந்த இடம் எலி, பூச்சிகள் கொசுக்களின் இருப்பிடமாக மாறிவிடுகிறது. உடல்நலச் சீர்கேடுகளான தொற்றுநோய், டைபாய்டு, பிளேக், வயிற்றுப் போக்கு மற்றும் தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திடக் கழிவுகள் நீரையும் காற்றையும் மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
சுகாதாரம்... அடிப்படை உரிமை
சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழ்நிலை யில் வாழும் உரிமை நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரிவு 21இல் உறுதி அளிக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். நமது நாட்டின் முதன்மைச் சட்டமான அரசியலமை ப்புச் சட்டம், பிரிவு 51-ஏ (ஜி)ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் மற்றும் அதனை மேம்படுத்தவும் அடிப்படைக் கடமையை விதித்துள்ளது. இந்தக் கடமையை பிரிவு 48ஏ-வின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் விதித்துள்ளது. சுகாதாரமான சூழலில் வாழ்வது கூட அடிப்படையான மனித உரிமை ஆகும். 1948இல் நடைபெற்ற உலக மனித உரிமைப் பிரகடனம் தனது 3ஆவது பிரிவில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் உரிமையைப் பிரகடனப் படுத்தியது. நமது அரசியலமைப்புச் சட்டமும் பிரிவு 25இல் ஒவ்வொரு குடிமகனும் தன் குடும்பத்தோடு நலமாகவும் நோயில்லாமலும் வாழும் உரிமையை அறிவுறுத்துகிறது. வளமான, ஆரோக்கியமான மனித வளங்க ளை உருவாக்க சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை யாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நிதியை ஒதுக்கி திடக்கழிவு மேலாண்மையை சமூக அக்கறையோடு அமல்படுத்த வேண்டும். குப்பைக் கிடங்கு உள்ள இடங்களிலேயே உரம் தயாரிக்கவும், மறு சுழற்சி செய்யவும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். விதி களை மீறி கழிவுகளை கொட்டுவோர் மீது பார பட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் எத்தனை ஸ்மார்ட் சிட்டி, ஸ்வச் பாரத் திட்டங்களை கொண்டுவந்தாலும் சுற்றுச் சூழல் மாசடைவதையும், நீர்நிலைகள் மாசடை வதையும் தடுக்க முடியாது.