tamilnadu

img

ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவியா?

சிபிஎம் கடும் ஆட்சேபணை

புதுதில்லி, மார்ச் 17- உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மோடி அரசாங்கத்தால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவைக்கு உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி யை நியமனம் செய்திருப்பதன் மூலம் மோடி அரசாங்கம் வெட்கங் கெட்ட முறையில் நீதித்துறையின் சுயாட்சித் தன்மையை அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டத்தால் பொறிக்கப் பட்டிருந்த - அசுத்தப்படுத்தப் படக்கூடாத கொள்கையாக இருந்த தனித்தனியாக அதிகாரங்களுடன் இருந்த அரசியல் சாசன அமைப்பு களை அழித்துக்கொண்டி ருக்கிறது. சென்ற ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இதே ரஞ்சன் கோகோய், “நீதிபதி கள் ஓய்வுபெற்றபின்பு அரசின் நிய மனத்தைப்பெறுவது,  நீதித்துறை யின் சுதந்திரத்திற்கு ஒரு கறை யாக (scar) இருக்கிறது,” என்று தற்போதைய நிலைக்கு நேர்முர ணாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் நீதித்துறை என் பது சுதந்திரமானதும் சுயேச்சை யானதும் மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்திட வேண்டிய முக்கிய பங்கினையும் அது  பெற்றிருக்கிறது என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி எவ்விதமான ஊசலாட்டமுமின்றி ஏற்கனவே கூறி யிருக்கிறது. நீதியை வழங்குவதில் தற்போது ஏற்பட்டுவரும் தாம தங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நள்ளிரவில் மாற்றல் செய்யப்படு தல், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப் பட்டது குறித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் வந்துள்ள வழக்குகளை விசாரிக்காமல் தாம தப்படுத்தி வருதல் போன்றவை மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத் தாது; மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு களுடன் இத்தகைய அணுகுமுறை ஒத்துப்போகவில்லை.

நீதித்துறையானது அரசு எந்திரத்தால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது; அதன் பொறுப்புகளை கைவிடச் செய்து கொண்டிருக்கிறது என்று பரவலான முறையில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் இப்படி ஒரு நிய மனத்தைச் செய்திருப்பதை கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுதியான முறையில் எதிர்க்கிறது.  அரசமைப்புச்சட்டத்தின் உன்னத மான நலன்களுக்காக, இந்தப் போக்கு உடனடியாக சரிசெய்யப் பட வேண்டும். எனவே, குடியரசுத் தலைவர், திரு. ரஞ்சன் கோகோயை நியமனம் செய்வதை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.