புதுதில்லி, பிப்.21- தலைநகர் புதுதில்லியில் அஜாய் பவனில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட்டன. மாமேதைகள் காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை, 172 ஆண்டுக்கு முன்பு பிப்ரவரி 21ல் வெளியிடப்பட்டது. இந்த நாள் வெள்ளியன்று உலகம் முழுவதும் சிவப்பு புத்தக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் கே. நாராயணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி. ராகவலு, லெஃப்ட் வேர்டு புக்ஸ் மேலாண்மை ஆசிரியர் சுதான்வ தேஷ்பாந்தே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநில செயலாளர் பேராசிரியர் தினேஷ் வார்ஷ்னே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ். புண்ணியவதி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் இவற்றை வெளியிட்டார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய பி.வி. ராகவலு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்று மட்டுமே முதலாளித்துவம் உலகம் முழுதும் உழைக்கும் மக்கள் மீது ஏவியுள்ள ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடு வதற்கு உலகத் தொழிலாளர் வர்க்கம் ஏந்தக்கூடிய ஒரே ஆயுதம் என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவருமான புண்ணியவதி உரையாற்றுகையில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எந்த அளவிற்கு பெண்களுக்கும் மற்றும் காஷ்மீர் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் உடையது என்று விளக்கினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் கே.நாராயணா பேசுகை யில் உலகம் மற்றும் இந்தியாவில் உள்ள பிரச்சனைகளின் அடிப்படை யில் பார்க்கும் போது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் உடையதாக மாறியிருக்கிறது என்றார். உலகம் முழுதும் வர்க்கப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க அது அறைகூவல் விடுக்கிறது. ஆர்எஸ்எஸ்-இன் தலை வர் மோகன் பகவத் இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர்வதற்கு ஆயுதப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக் கிறதைக் குறிப்பிட்ட நாராயணா, கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை இதற்குச் சிறந்த முறையில் பதிலளிக்கிறது என்றார். தேஷ்பாந்தே பேசுகையில், உல கத்தின் உழைக்கும் மக்களை விழிப் படையச் செய்வதால் கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றைக்கும் பொருந்தக் கூடியதே என்றார்.
பேராசிரியர் தினேஷ் வார்ஷ்னே பேசுகையில், உலகில் அதிகம் விற்கக் கூடிய புத்தகங்களில் ஒன்றாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திகழ்கிறது. ஏனெனில் சுரண்டப்படு பவர்களும் உலகில் அதிக அளவில் இருக்கின்றனர். இது, தத்துவார்த்த அடித்தளத்துடன் வர்க்கப்போராட்டத் தையும், உலகத்தின் வரலாறு, வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என்பதை யும் பிரதிபலிப்பதாகக் கூறினார். தமிழகத்தில் 10ஆயிரம் இடங் களில் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.
(ந.நி.)