tamilnadu

img

கொரோனா வைரஸ்: தில்லியில் இரண்டு வயது சிறுவன் பாதிப்பு

புற்றுநோய் மருத்துவமனை மூடல்

புதுதில்லி, ஏப்.15- இந்தியாவில் கொரோனா வைரசுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தில்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. புதன் கிழமை காலை எட்டு மணி நிலவரப்படி அங்கு மட்டும் இதுவரை 1,561 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தில்லியில் தற்போது இரண்டு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட மிகக்குறைந்த வயதுடைய நோயாளியாக பதிவாகி யுள்ளது. இதனால் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த புற்றுநோய் மருத்துவமனை ஏப்ரல் 29-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது.

 செவிலியராக பணியாற்றும் குழந்தையின் தாயார், தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள இவர் மூலமாக தான் குழந்தைக்கும் வந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து செவிலியரின் கணவருக்கும் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வு முடிவுக்காக மருத்து வர்கள் காத்திருக்கின்றனர். தாயார் பணிபுரியும் மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. புற்றுநோய் மருத்துவமனையில் பணி யாற்றும் 45 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,561 ஆக உயர்ந்துள்ளது.