புதுதில்லி:
ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பி அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சிஏஐடி (CAIT), மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும்படி நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டிருந்தது.இதையடுத்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், ரூபாய் நோட்டுகள் பாக்டீரியாக்கள், கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை தாங்கிச்செல்லக்கூடி யவை. ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவலை தடுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஊக்கத் தொகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.