இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ள சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கடந்த 24 மணி நேரத்தில் 49,310 கொரோனா பாதிப்புகள் மற்றும் 740 இறப்புகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது, இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்புகளில், 8,17,208 பேர் வெற்றிகரமாக குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4,40,135 சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்பட்டு உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 3.5 லட்சமாக உள்ளது. இதேபோல் 1,92,964 கொரோனா பாதிப்புகள் மற்றும் 3,232 இறப்புகளுடன் தமிழ்நாடு நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.