tamilnadu

கொரோ அச்சுறுத்தல் : நீட் தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கெரோனா அச்சுறுத்தல் இன்று  உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தற்போது வரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கெரோனா அச்சம் காரணமாக மே 3ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வை ஒத்தி வைப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வே எழுத நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.