tamilnadu

img

கொரோனா பரிசோதனை 4.14 கோடியாக உயர்வு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய இதுவரை 4.14 கோடி சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய சனிக்கிழமையன்று வரை 4 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரத்து 636 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், சனிக்கிழமையன்று மட்டும் 10 லட்சத்து 55 ஆயிரத்து 027 - சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

;