tamilnadu

img

புதுச்சேரி எம்எல்ஏ-களுக்கு ஜூலை 27-இல் கொரோனா பரிசோதனை...  

புதுச்சேரி 
புதுச்சேரி மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கதிர்காமம் தொகுதி எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால், சட்டமன்றம் மற்றும் எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதனால் அம்மாநிலத்தின் இன்றைய (சனிக்கிழமை) சட்டப்பேரவைக் கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில் நடைபெற்றது. சட்டமன்ற கூட்டத்தில் மாநில நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

வரும் திங்கட்கிழமை அனைத்து எம்எல்ஏ-களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதால் சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அடுத்த 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

;