tamilnadu

img

ஐசி எம்ஆர் விஞ்ஞானிக்கு கொரோனாதொற்று உறுதியானது

ஐசிஎம்ஆர் தலைமையகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தில்லியில் இயங்கி வரும் ஐசிஎம்ஆர் தலைமையகத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மும்பையில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தில்லி திரும்பியுள்ளார். 
இதைத்தொடர்ந்து ஐசிஎம்ஆர் தலைமையகம் சீல் வைக்கப்பட்டு கிருமி நாசி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.