tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 803 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர்  பலியாகி உள்ளனர். 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் 52,050  -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,55,746  ஆக உள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில்  803-பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  38938 ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,86,298-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,30,510-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். என்றுகூறப்பட்டுள்ளது.