tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது...  

தில்லி 
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் தினசரி பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒருவாரகாலமாக  தினமும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  குறுகிய காலத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள இந்தியா உலகின் கொரோனா பட்டியலில் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.  

இந்நிலையில் கடந்த 12 மணிநேரத்தில் இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 7 லட்சத்து 98 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மதியம் வரை 31 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரதத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பரிசோதனை அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதால் இன்று இரவுக்குள் நாட்டின் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டும் சூழல் உருவாகியுள்ளது.  

;