புதுதில்லி, ஆக. 2- தில்லியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 15 பேர் உயிரிழந்தனர். தில்லியில் ஜூன் மாதம் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியிருந்தது. இதனால் மத்திய இதையடுத்து கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ராணுவம் சார்பில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவ மனை உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிசிஆர் பரிசோதனையுடன் ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் பரிசோதனையையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் நோயாளிகள் உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக உள்ளது. இதன்மூலம் சுமார் இரண்டு மாதத்திற்குப் பிறகு தில்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதுவரை 1,37,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1186 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் 1,23,317 பேர் குணமடைந்துள்ளனர். 4004 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,356 சகிச்சை பெற்று வருகின்றனர். தில்லி யில் கடந்த 24 அணி நேரத்தில் 4289 பிசிஆர் டெஸ்டுகளும், 8441 ரேபிட் ஆண்டிஜென் டெஸ்டுகளும் செய்யப்பட்டுள்ளன.