tamilnadu

img

ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா...   பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு...  

புவனேஸ்வர் 
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலமான ஒடிசாவில் கொரோனா மிதமான வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை அங்கு 1.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 546 பேர் பலியாகிய நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரான ஜோதி பிரகாஷுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில்  கொரோனராவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கைத்தறி துறை அமைச்சர் பத்மினி தியான், உயர்கல்வித்துறை அமைச்சர் அருண் குமார், தொழிலாளர்துறை அமைச்சர் சுஷாந்த் சிங் ஆகியோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தை போல 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

;