tamilnadu

img

இந்தியாவில் ஒரே நாளில் 52972 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 52972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சதை கடந்துள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,03,696  ஆக உள்ளது  மேலும் 771-பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,135 ஆக உள்ளது.  
கொரோனா தொற்று பாதிப்புடன் தற்போது 5,79,357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதுரும் 1,186,203-பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.