tamilnadu

img

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 32695 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இது வரை இல்லாத உச்சம் தொட்ட பாதிப்பு : இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று 
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் - 6,12,815 ஆக உள்ளது. 
தற்போது நாடு முழுவதும் 331146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.