நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 22771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 22,771 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 442 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,48,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,94,227 பேர் குணமடைந்துள்ளனர். 18,655 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதுவரை ஒட்டு மொத்தமாக 1,92,990 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 8,376 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 891 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,357 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 58,378 பேர் குணம் பெற்றுள்ளார்கள்.