புதுதில்லி:
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில்புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 52 எம்.பி.க்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மீதுநம்பிக்கை வைத்து வாக்களித்த 12 கோடியே 13 லட்சம் வாக்காளர்களுக்கும் சோனியா காந்தி நன்றி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதேபோல வாக்காளர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி தெரித்தராகுல்காந்தி, எவ்வித பாகுபாடும் இன்றி இந்தியாவில் உள்ள அனைவருக்காகவும், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை காங்கிரஸ் உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.