புதுதில்லி:
வாக்குச்சாவடி வாரியாக பெற்ற வாக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் வேட்பாளர்களை, அக்கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் பெற்ற வாக்குகளை, வாக்குச் சாவடி வாரியாக அனுப்பி வைக்கும்படி காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 20-ல் அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 7ஆம் தேதி இந்த விவரங்கள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.