புதுச்சேரி:
சுதேசி பாரதி பஞ்சாலைகளுக்கு மூடுவிழா நடத்திய புதுச்சேரி ஆட்சியாளர்களை கண்டித்து சிஐடியு சார்பில் தீப் பந்த ஊர்வலம் நடைபெற்றது.புதுச்சேரியின் பாரம்பரியமிக்க சுதேசி, பாரதி பஞ்சாலைகள் சமீபத்தில் மூடப்பட்டது. பஞ்சாலைகளுக்கு தொடர்ந்து மூடுவிழா நடத்தி வரும் புதுச்சேரி ஆட்சியாளர்களை கண்டித்தும் துணை நிலை ஆளுநரின் அடாவடி செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் சிஐடியு சார்பில் புதுச் சேரியில் போராட்டம் நடைபெற்றது.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி பஞ்சாலை வாயில் முன்பு துவங்கிய ஊர்வலத்திற்கு சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபு ராஜ், நிர்வாகிகள் கலியமூர்த்தி, குணசேகரன், மதிவாணன், மது உள்ளிட்ட திரளான ஆலைத்தொழிலாளர்கள் கையில் தீப் பந்தத்துடன் ஊர்வலத்தில் பங் கேற்றனர்.முன்னதாக துவங்கிய ஊர்வலம் கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு வந்தடைந்தனர்.பின்னர் அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முகக் கவசம் அணிந்து கோரிக்கைமுழக்கம் எழுப்பினர்.