புதுதில்லி, மார்ச் 1- தில்லியில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ள நிலை யில் வீடுகளை விட்டு வெளி யேறியவர்கள் மீண்டும் திரும்பவேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகை இன்று முதல் (ஞாயிறு) வழங்கப் படும் என்றும் தில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள் ளார். மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்ட த்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடி யவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல்கள் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் இதுவரை நாற்ப துக்கும் மேற்பட்டோர் பலி யாகியுள்ளனர். ஏராள மானோர் படுகாயமடைந்துள் ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர். இதனிடையே தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி யாளர்களிடம் கூறுகையில், நிலைமை கட்டுக்குள் உள் ளது. வேறு எங்கும் கலவரம் நடந்ததாக பதிவுகள் இல்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார். கலவரத்தைத் தொடர்ந்து தில்லியின் காவல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள ஸ்ரீவத்ஸவா, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வராமல் தடுக்கவும், நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த வர்களிடம் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.