புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது கடந்த ஜூன் 30 ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் வெளியாக தேசிய கல்விக்கொள்கை வரைவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து ஜூலை 31ம் தேதிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கல்விக்கொள்கை குறித்து வரும் 8ம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வி அமைச்சர்களுடன் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்பர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாநிலங்கள் தங்கள் தரப்பு தொடர்பான கருத்தை வெளிப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.