tamilnadu

img

தீவிரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் பலி... 

ஜம்மு காஷ்மீர் 
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் வடமேற்கு பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் பாணியில் ஊடுருவி வருகின்றனர். 

இந்நிலையில், பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இன்று  பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள் தரப்பில் ஒருவரும்,  இந்திய பாதுகாப்பு படை தரப்பில் 2 சிஆர்பிஃப் வீரர்கள், ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் அசாத் லஹாரி தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதியாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.