tamilnadu

img

சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் மீது காலணி வீச்சு

அமராவதி
தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட அமராவதி தலைநகர கட்டுமானப் பணிகளைப் பார்வையிட ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்றார். வெங்கடபாலம் என்ற இடத்தில் சந்திரபாபு நாயுடு சென்ற டீலக்ஸ் பேருந்தை  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு விவசாயிகள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்திலிருந்தஇருந்த தெலுங்கு தேச நிர்வாகிகள் கீழே இறங்க இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் சூழல் உருவானது. 

ஆனால் சந்திரபாபு நாயுடு தன்னுடன் பேருந்தில் பயணித்த நிர்வாகிகளை அமைதிக்காகக் கூறியதால் மோதல் தவிர்க்கப்பட்ட நிலையில், சாலையில் போராடிய ஒய்.எஸ்.ஆர். கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் சந்திரபாபு நாயுடு அமர்ந்திருந்த பேருந்தின் கண்ணாடி பகுதியில் திடீரென காலணியை வீச வெடித்தது மோதல். எனினும் காவல்துறையினர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி சந்திரபாபு நாயுடு வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

;