சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 18.1 லட்சம் மாணவர்கள் மற்றும் 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 31 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in மற்றும் cbseresults.nic.in ஆகிய சிபிஎஸ்இ போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.