tamilnadu

img

மாருதி நிறுவன முன்னாள் நிர்வாகி மீது சிபிஐ வழக்கு பதிவு

புதுதில்லி,டிச.24- 110 கோடி ரூபாய் வங்கி மோசடிவிவகாரத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மாருதி நிறுவனத்தில் இருந்து விலகிய ஜெக தீஷ் கட்டார், கார்னேஷன் ஆட்டோ இந்தியா பிரை வேட் லிமிடெட்  என்ற பெயரில் சொந்த நிறு வனத்தை துவக்கினார். இதற்காக பஞ்சாப் நேஷ னல் வங்கியில் இருந்து 170 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், பணத்தைத் திருப்பிச் செலுத்தா ததால், கடந்த 2015 ஆம் ஆண்டு அது வாரக்கட னாக மாறிவிட்டதாகவும் வங்கித் தரப்பில் கூறப்படு கிறது. கட்டார் செலுத்த வேண்டிய தொகை 110 கோடி ரூபாய் என்று கூறியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, அவர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கட்டார் மீது சி.பி.ஐ.முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் துவக்கி யுள்ளது.