tamilnadu

img

வலைப்பதிவு : அத்வானியின் இதழ்களில் வெற்றிப் புன்னகை

மத்திய உள்துறை அமைச்ச ருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது நெருக்கடியின் கடுமைதன்மையை உணர்த்துகிறது. தொற்று எண்ணிக்கை ஒவ்வொருநாளும் அதிகரித்து கொண்டுள் ளது. ஆனால் மத்திய அரசாங்கம் தவிர்க்க வேண்டிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது.

பீகார் வெள்ளத்தில் 15 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய- மாநில அரசாங்கங்கள் கண்ணில்படவே இல்லை. மக்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பீகாருக்கு போர்க்கால அடிப்படையில் மத்திய மாநில அரசாங்கங்கள் உதவ வேண்டும்.

சீத்தாராம் யெச்சூரி

==============

மோடி அரசாங்கம் 10 இலட் சம் டன் பால் பவுடரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்துள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ30லிருந்து 17 ஆககுறைந்துவிட்டது. மகாராஷ்டிரா வில் பால் உற்பத்தியாளர்கள் அகிலஇந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் கொள்முதல் விலையை உயர்த்த  கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

அசோக்  தாவ்லே

=================

என்னிடம் இருப்பது பசு மாமிசம் இல்லை என நான் அவர்களிடம் கெஞ்சிக் கூறினேன். என்னிடம் இருப்பது பசு மாமிசம் எனில் இப்பொழுதே நான் இறப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. என்னை சுத்தியலால் தாக்கினார்கள். “ஜெய் ஸ்ரீராம்” என கூறுமாறு அடித்தனர்.

பசுபாதுகாப்பு கும்பலால் தாக்கப்பட்ட லுக்மன் கான்

===================

பேராசிரியர் சாய்பாபா 90% மாற்றுத் திறனாளி. பல மாதங்களாக சிறையில் உள்ளார். புற்று நோய் காரணமாக இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயாரை பார்க்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டார். 4ஆண்டுகளாக அவர் தாயாரை சந்திக்கவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. அவரது தாயார்  நேற்று இறந்துவிட்டார்.  இந்த நிகழ்வு சாய்பாபா வுக்கு எதிரான வழக்கைவிட நீதி துறையின் நிலையை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

நந்தினி சுந்தர்

============

அமித்ஷாவுக்கு தொற்று. மூன்று நாட்களுக்கு முன்புஅமைச்சரவை கூட்டத்தில் மோடியும் அமித்ஷாவுடன் இருந்தார். அப்படியானால் மோடி தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். இராமர் கோவில் பூஜைக்கு அவர் செல்ல முடியாது.  அத்வானியின் இதழ்களில் வெற்றிப் புன்னகை?

கர்நாடகா இளைஞர் காங். தலைவர் சிறீவத்சா

============

சாத்தான்குளம் நிகழ்வு பசுமையாக உள்ள இதே தருணத்தில் சென்னையில் புழல் பகுதியில் காவல்துறை தாக்குதல் காரணமாக சினீவாசன் எனும் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தான்இருந்த வீட்டுக்கு கோவிட் வேலைஇழப்பு காரணமாக வாடகை தரஇயலவில்லை. வீட்டு சொந்தக் காரர் ஆளுங்கட்சி பிரமுகர். அவரின் புகாரின் பெயரில் ஆய்வாளர் சாம் பென்சன், வீடு புகுந்து சீனிவாசனை அவரது மனைவி மற்றும்குழந்தைகள் கண்முன்னே மிருகத்தனமாக தாக்கினார். அவமானம் காரணமாக சீனிவாசன் தீக்குளித்தார். உயிரிழந்தார்.

பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன்

==============

“நமது உள்துறை அமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை. அண்டை மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என ஆச்சரியப்படுங்கள். பொது நிறுவனங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்றால் சக்தி வாய்ந்த பிரபலங்களின் ஆதரவு தேவை.

சசிதரூர், காங்கிரஸ் எம்.பி.,

----------------------

தொகுப்பு : அ.அன்வர் உசேன்