tamilnadu

img

போலீசிடமிருந்து ரூ.12 லட்சத்தை பறித்துச் சென்ற பாஜகவினர்.... துப்பக் சட்டமன்றத் தொகுதியில் அரங்கேறிய அராஜகம்

ஹைதராபாத்:
சோதனைக்குச் சென்ற இடத்தில், போலீசாரிடமிருந்தே ரூ. 12 லட்சத்தை பாஜக தொண்டர்கள் பறித்துச் சென்றசம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளும், காவல்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபடுவதும், அப்போது பணம் பறிமுதல் செய்யப் படுவதும் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் துப்பக் தொகுதியில் பாஜகசார்பில் போட்டியிடும் ரகுநந்தன் ராவுக்கு நெருக்கமான சித்திப்பேட்டைநகராட்சித் தலைவர் கட்வெர்கு ராஜா நர்சு மற்றும் சுராபி ராம்கோபால் (ரகுநந்தன் ராவின் மாமியார்) மற்றும் சுராபிஅஞ்சன் ராவ் (ரகுநந்தன் ராவின் அண்ணி)ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி யுள்ளனர். இதில் கணக்கில் வராத ரூ.18 லட்சத்து 67 லட்சம் ரொக்கம் பணமும் கண்டறியப்பட்டுள்ளது.இதனிடையே, போலீசாரின் சோதனை பற்றிய தகவல் அறிந்த பாஜக தொண்டர்கள், அந்த பகுதியில் கூடி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த பணத்தில் ரூ.12 லட்சத்தை, போலீசாரைத் தாக்கிவிட்டு பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர். டேவிஸ் என்ற போலீஸ் கமிஷனர்முன்னிலையிலேயே இந்த சம்பவம்அரங்கேறியுள்ளது. இது தெலுங்கானாவில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.