பாட்னா:
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிதிஷ் குமார் தங்களுக்கு ‘மகாதலித்’ என்று பெயர் மாற்றம் செய்தாரே தவிர, தங்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று தலித் மக்கள் பகிரங்கமாக தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.ரிஷிதேவ் உள்ளிட்ட 21 உட்சாதிப்பிரிவுகளை இணைத்து, ஒரு பெரும்பிரிவை கடந்த 2007-ஆம் ஆண்டு நிதிஷ்குமார் ஏற்படுத்தினார். அந்தப் பிரிவுக்கு ‘மகாதலித்’ என்ற நாமகரணத்தையும் சூட்டினார்.சாதிய பாகுபாடு ஆழமாக இருக்கும்பீகாரில், நிதிஷ்குமாரின் இந்த செயல்பாடு,அன்றைய சூழலில், தலித் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக பார்க்கப்பட்டது. அத்துடன் தலித் மக்களின் பெருவாரி வாக்குகளும் நிதிஷ்குமாருக்கே கிடைத்து வந்தது.
ஆனால், இந்த முறை பீகார் தேர்தலில், அவ்வாறு நடக்கும் என்று உறுதியுடன் கூற முடியாத நிலையில் உள்ளது. தலித் தலைவரான ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி,நிதிஷ் குமாரின் கூட்டணியில் இருந்தும் கூட,தற்போதைய தேர்தலில் நிதிஷ் குமாருக்கு தலித்துக்களின் வாக்குகள் செல்வது சந் தேகம் என்று ஆகியிருக்கிறது.“மகாதலித்துகளில் 21 பிரிவினர் ஒன்றிணைந்துள்ளனர். இவ்வாறு ஒன்றிணைந்து13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எங்களின் வாழ்வாதார நிலையில் முன்னேற்றம் இல்லை. எங்களுக்கு ‘மகாதலித்’ என்ற அடையாளம் கிடைத்ததோடு சரி, மற்றபடிவேறு என்ன கிடைத்தது?” என்று ‘தி இந்து’ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ‘மகாதலித்’ பிரிவு மக்கள் நிதிஷூக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.“பீகாரில் இரண்டாம் முறையாக வெற்றிபெற்ற போது, ‘மகாதலித்’ பிரிவு மக்களுக்குதலா 1306.8 சதுர அடி நிலம் வழங்கப் படும் என்று நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தார்.ஆனால் இன்று எங்களிடம் இறந்தோரைப் புதைக்கக் கூட நிலம் இல்லை. இரவில் யாருக்கும் தெரியாமல் நாங்கள் புதைக்க வேண்டியுள்ளது” என்று புலம்பியுள்ளனர்.
“இன்னும் நாங்கள் வைக்கோல் வேய்ந்த வீடுகளில்தான் வகிக்கிறோம். யாருக்கும் காங்கிரீட் வீடுகள் கிடையாது. டிவி கிடையாது. ‘தூய்மை இந்தியா’ என்றுகூறுகிறார்கள். ஆனால், எங்கள் பகுதிகளில் ஒரு கழிப்பறைகள் கூட இல்லை.
எங்களின் குடியிருப்பு பகுதியில் பள்ளிகள் இல்லை; ரேசன் கடை இல்லை; சமுதாயக் கூடம் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; சாலைகள் இல்லை. குழந்தைகளுக்கு காலணி இல்லை; உடைகளே கூட சிலருக்குத்தான் இருக்கின்றன.எங்களில் பலர் தினக்கூலிகள். மாதத்தில் 10 நாட்களுக்கும் குறைவாகவேவேலை கிடைக்கும். பொதுவிநியோகம் என்பது மோசம். சிலருக்கு வறுமைக்கோட் டுக்குக் கீழ் உள்ளோருக்கான கார்டுகள் இருந்தாலும், அவை உணவுப்பாதுகாப்புச் சட்ட வரம்புக்கு வெளியே தள்ளப்பட்டு விட்டன.பீகாரில் வேலை இல்லாததால் தலித் இளைஞர்கள் பஞ்சாப் வயல்வெளிகளில் வேலைசெய்யப் போய்விட்டனர். கொரோனா பொதுமுடக்கத்தின்போது, இவர்கள் ஊர் திரும்பினார்கள். ஆனால், தற்போது மீண்டும் பஞ்சாப்பிற்கே பணியாற்ற சென்று விட்டனர், காரணம் வேலையின்மைதான்.
பொதுமுடக்கத்திற்குப் பிறகு பஞ்சாப் பிற்கு பேருந்தில் செல்ல கட்டணம் ரூ. 3ஆயிரம் ஆகிறது. எனினும் இதற்கு 10 சதவிகித வட்டிக்குக் கடன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். பீகாரில், தொழிற்சாலை கட்டியிருந்தால் நாங்கள் ஏன் பஞ்சாப்பிற்குப் போக வேண்டும்?” என்று தங்களின் அவலநிலையை அடுக்கியுள்ளனர்.தாம்தஹா, ரூபாலி தொகுதிகளைச் சேர்ந்த இந்த மக்கள், 2015-இல் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு வாக்களித்தவர்களே. எம்எல்ஏ-க்களும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.ஆனால், இந்தமுறை நிதிஷ் குமார்மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அத்துடன் ‘யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எங்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது’ என்றுவிரக்தி மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இது பீகார் தேர்தலில் பாஜக - ஐக்கியஜனதாதளம் கூட்டணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.