புதுதில்லி, மே 1- கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ கத்தில் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டுள்ளது. அது மே 3-ஆம் தேதி யோடு நிறைவடைய உள்ள நிலையில், கொரோ னாவை எதிர்த்த யுத்தத்தை தீர்மானிக்கப் போவது மே மாதம் தான்; எனவே ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
“மே, 3-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில தளர்வு களுடன் முழு அடைப்பு தொடரும்” என, மத்திய அரசு ஓரிரு தினங்களுக்கு முன் சூசகமாக தெரி வித்தது. தமிழகத்திலும் கூட ஊரடங்கை முழு மையாக தளர்த்துவதற்கு சாத்தியமில்லை என முதல்வருடன் ஆலோசித்த மருத்துவர் குழு கூறியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போர் ஒரு பக் கம் நடைபெற்றாலும், நாட்டின் பொருளாதா ரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்ற குரலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், முழு அடைப்பிற்கு பின் செய்யவுள்ள தளர்வுகள் குறித்து, தில்லி நொய்டாவிலுள்ள பிரபல தனியார் மருத்துவ மனையின் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் கூடுதல் இயக்குனர், டாக்டர் ராஜேஷ் குமார் குப்தா கூறியதாவது:- முழு அடைப்பின் மூலம் கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடி யுமே தவிர, அதை முழுமையாக ஒழித்துவிட முடியாது. எனவே, ஹாட் ஸ்பாட் பகுதிகளில் முழு அடைப்பு நடவடிக்கைகளை குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பதிவாகும் மாவட்டங்களில் தடையை நீட்டிப்பது அவசி யம். அதே நேரத்தில், பாதிப்புகள் இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் தளர்வுகளை அறி விக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சர் கங்கா ராம் மருத்துவமனையின் பிரபல நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த்குமார் கூறுகையில், ரயில் மற்றும் விமான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான சாலை போக்குவரத்து ஆகிய வற்றை இந்த மாதம் முழுவதும் நிறுத்த வேண் டும். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட் டத்தில் மே மாதம் மிகவும் முக்கியமானது, ஏனெ னில் இந்தியா இப்போது வரை சிறப்பாக செயல் பட்டுள்ளது; அதே தொற்று பரவுதலை கட்டுக் குள் வைத்திருப்பது முக்கியம். சிவப்பு மண்ட லங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துவது அவசியம். அதே நேரத்தில் பசுமை மண்ட லங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் மிக வும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
கொரோனவுக்கு எதிரான போராட்டத்தின் இந்தச் சூழலில் எந்தவொரு பெரிய தளர்வு களும் “பேரழிவைத் தரும்” என்று மேக்ஸ் ஹெல்த்கேர் இன் இன்டர்னல் மெடிசின் இணை இயக்குநர் ரோம்ல் டிக்கூ கூறினார். மேலும் அவர் கூறுகையில், குறைந்தது நான்கு வாரங்களாவது ஊரடங்கு இருக்க வேண்டும்; தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே ஊரடங்கை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல; சில பொருளாதார நடவடிக்கைகளை பசுமை மண்டலங்களில் அனுமதிக்கலாம்; மால்கள், வர்த்தக மையங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த மாதம் முழு வதும் மூட வேண்டும் என்றார்.
‘ரெட் ஜோன்’
‘ரெட் ஜோன்’ (சிவப்பு மண்டலம்) என்பது 15- க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்கள் இருக்கும் மாவட்டம் ஆகும். தமிழகத்தில் ரெட் ஜோன் ‘பட்டியலில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
‘ஆரஞ்சு ஜோன்’
ஒற்றை இலக்க எண் கொண்ட மாவட் டங்கள், அதிலும் புதிததாக 14 நாட்களில் தொற்று ஏற்படாதவை ‘ஆரஞ்ச் ஜோன்’ ஆகும்.
‘கீரீன் ஜோன்’
கொரோனா தொற்று வந்து மேலும் முழு மையாக குணமடைந்தவர்கள் கொண்டதும், 24 நாட்களில் புதிதாக எந்தவொரு நபருக்கும் கொரோனா வராமல் இருந்தால் இது ‘கிரீன் ஜோன்’ ஆகும். தமிழகத்தில் தருமபுரி, ஈரோடு, தூத்துக்குடி, தேனி இந்தப்பட்டியலை நோக்கி நகர்கிறது.