மதுரை:
மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றில் பணியாற்றிய கொரோனா நோய் தொற்று கணக்கெடுப்புப் பணியாளர்கள் ஊதிய நிலுவை, மாற்று வேலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர்.
அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “கடந்த ஜூலை மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தொற்று கணக்கெடுக்கும் பணி பார்த்து வந்தோம். மாநகராட்சியில் 100 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 45 முதல் 60 நபர்கள் வேலை பார்த்துவந்தோம். தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியாற்றிய நபர்களை நிறுத்திவிட் டார்கள். பண்டிகைக் காலம் என்பதால் எந்த வேலைக்கும் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட் டுள்ளோம். ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றிமக்கள் நலன் கருதி அனைவரும்வேலை செய்தோம். அதில் நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தக் காலத்தில் வேலை செய்து வந்த நாங்கள் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் பெறகடந்த ஒன்றரை மாத காலமாகஅலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். நிலுவையில் உள்ள ஊதியத்தை ஓரிரு நாட்களில் பெற்றுத்தரவேண்டும். மேலும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டுமென தெரிவித்துள்ளனர்”.