tamilnadu

வங்கிக் கடன் தவணை : ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க இயலாது...

புதுதில்லி:
வங்கிக் கடன் தவணைகளின் ஒத்திவைப்புக் காலத்தை 6 மாதத்திற்கு மேல்நீட்டிப்பது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.கொரோனா காலத்தில் வேலை வருமானமின்றி  மக்கள் அவதிப்பட்ட காலத்தில் கூடவங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்தது ரிசர்வ் வங்கி.இதனை எதிர்த்து தொடுத்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி  தாக்கல் செய்தது.  காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.அதில் வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை பாதிப்பதோடு, கடன் வழங்கும் முறையை பலவீனப்படுத்தி விடும். வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்துவிடும். தள்ளிவைப்புக் காலம் முடிந்த பிறகு கடனை திருப்பிச் செலுத்தும் கடமையில் இருந்து வழுவச் செய்துவிடும் என்று தெரிவித்துள்ளது.