tamilnadu

img

பெங்களூர் நாகரத்தினம்மா பிறந்தநாள்....

பெங்களூர் நாகரத்தினம்மா 1878ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் நாள் பிறந்தார்.இவர் புகழ்பெற்ற கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர், பண்பாட்டுச் செயல்பாட்டாளராக திகழ்ந்தவர். தேவரடியார் மரபில் வந்த இவர் கலை வளர்ச்சிக்குதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார். ஆண் ஆதிக்கம்செலுத்தும் திருவிழாவிற்குள், பெண் கலைஞர்களுக்குஅதில் பங்கேற்க சமத்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அளவுக்கு பெண்ணிய ஆக்கிரமிப்பாளராக இருந்தார். மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராகஇருந்துள்ளார். மேலும், இவர் கவிதை மற்றும்புராணக்கதைகள் பற்றிய புத்தகங்களையும் திருத்தி வெளியிட்டார். 

திருவையாற்றில் தியாகராஜர் சமாதியின் மீது ஒரு கோயிலை எழுப்பியவர். தியாகராசர் ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். முத்துப்பழனி என்ற பெண் கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக்காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக்கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர். மேலும் இவர் வெளிட்ட நூல்கள்: “மத்யா பானம்”(தெலுங்கு), சமஸ்கிருதத்தில் “ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி” (சமஸ்கிருதம்) “பஞ்சகீரண பௌதீகம்” (தமிழ்) போன்றவையாகும்.நாக ரத்தினம்மா 1952ஆம் ஆண்டு மே19இல் தனது 74 வயதில்இறந்தார். தியாகராஜரின் சமாதிக்கு அடுத்ததாக இவரது நினைவாகஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

===பெரணமல்லூர் சேகரன் ===