புதுதில்லி:
அயோத்தி நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப் பட்ட சமரசக் குழு ஜூலை 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவ காரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரசகுழுவை உச்சநீதிமன்றம் நிய மித்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.இந்நிலையில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை எனக்கூறி இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்தமனு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழ க்கறிஞர் பராசரன், விரைவில் விசாரணையை தொடங்க வேண் டும் என்றும், அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து, சமரசக் குழு விசாரணை நடத்தி, ஜூலை 25 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 25 ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்து, இணக்கமானதீர்வை பரிந்துரை செய்யாவிட்டால், அதற்குப் பிறகு இந்த விவகா ரத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.