தில்லி
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கொரோனா பரவல் கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் சற்று மிதமான வேகத்தில் பரவி வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,075 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,30,606 ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஞாயிறு) ஒரே நாளில் 21 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,827 ஆக அதிகரித்துள்ளது. 1,807 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,14,875 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 15 ஆயிரத்து 731 பேர் சிகிச்சயில் உள்ளனர்.