tamilnadu

img

அணைகளை புனரமைக்க  ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 

புதுதில்லி:
நாடு முழுவதும் அணைகள் புனரமைப்புமற்றும் மேம்பாட்டுத்திட்ட திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது. இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாகநாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்து வதற்காக, அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (டி.ஆர்.ஐ.பி) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதன்படி ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031-க்குள்செயல்படுத்தி முடிக்கஇலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.மேலும் உணவு தானியங்களை சணல் பைகளில் மட்டுமே பேக்கிங் செய்து விநியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அணைகள் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டதாக மத்தியஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களிடம்  தெரி வித்துள்ளார்.