tamilnadu

img

7 மாதத்திற்குள் கூடுதலாக 19 ஆயிரம் கோடி செலவு...நிதிப் பற்றாக்குறை இலக்கைத் தாண்டியது!

புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில், அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாட்டின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசம் 7 லட்சத்து இருபதாயிரத்து 445 கோடி ரூபாயைத் தொட் டுள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப்பற்றாக் குறை அளவை, 3.3 சதவிகிதம்என்ற அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்குநிர்ணயித்தது. அதன்படி, நடப்புநிதியாண்டின் நிதிப்பற்றாக் குறையை 7 லட்சத்து 3 ஆயிரம்கோடி ரூபாயாக வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான முதல்7 மாதங்களிலேயே நிதிப்பற் றாக்குறையானது, மத்திய அரசின் இலக்கைத் தாண்டி, 7 லட்சத்து 22 ஆயிரத்து 445 கோடி ரூபாய் ஆகியுள்ளது. இது இலக்கைக் காட்டிலும் 2 சதவிகிதம் அதிகமாகும். அதாவது, 12 மாதங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவு, 7 மாதங்களுக்கு உள்ளாகவே செய்து முடிக்கப்பட்டு விட்டது.அதேபோல, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவினம் 27 லட்சத்து 86 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதிலும், ஏப்ரல் முதல் அக்டோபர்வரையிலான, 7 மாத காலத்தில்,அரசின் மொத்த செலவினம் 16 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

;