மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஞாயிறன்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிற்கு வந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி தேசத்தையே போர்க்களமாக மாற்றியுள்ள மத்திய பாஜக அரசின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, தில்லியில் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்கள் நடத்தியுள்ள கொலைவெறியாட்டத்தில் 47 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ள பயங்கரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் கொல்கத்தாவிற்குள் வராமல் திரும்பிச்செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்பட இடதுசாரி இயக்கங்கள் சார்பில் அமித் ஷா திரும்பிப் போ எனும் எழுச்சிமிகு இயக்கம் நடைபெற்றது.