சென்னை, ஆக. 26- வேதாரண்யத்தில் இரு தரப்பி னர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டதற்கு திமுக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள், மதிமுக ஆகிய கட்சித் தலை வர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே விபத்து ஒன்றின் காரணமாக இரு தரப்பி னர் இடையே தகராறு ஏற்பட்டது. காவல்நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த விபத்துக்கு காரணமான அந்த ஜீப்புக்கு திடீ ரென தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன் முறையாக வெடித்தது. வன் முறையில் ஈடுபட்டவர்கள்அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். மு.க.ஸ்டாலின்: வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறை யாளர் சிலர் அம்பேத்கரின் திரு வுருவ சிலையை சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது. சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அர சும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்தது சரியான போக்கல்ல. மக்களுக்காக தங் களை முழுமையாக அர்ப் பணித்த தலைவர்களின் சிலை களை சிதைக்க முற்படுவோரின் அற்பச் சிந்தனைகளை அகற்றி யெறியும் பணிகளைத் திமுக தனது தோழமை சக்திகளுடன் இணைந்து மேற்கொள்ளும்.
ஆர். நல்லகண்ணு: வேதாரண் யத்தில் அம்பேத்கர் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. அதிர்ச்சி யளிக்கிறது. இது கண்டனத்துக் குரியது. சிறு, சிறு பிரச்சனை களை முன்பின் விரோதங்களை, சமூக பிரச்சனையாக, சமூக பதற்றமாக மாற்றும் முயற்சி களை கைவிட வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கும், அமை திக்கும் அனைவரும் சேர்ந்து பாடுபட முன்வர வேண்டும். திருமாவளவன்: வேதாரண் யத்தில் அம்பேத்கர் சிலை இடித்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக புதிய சிலை ஒன்றைத் தமிழக அரசு நிறுவியிருக்கிறது. விடு தலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஏற்ப சிலையை நிறுவிய தமிழக அரசுக்கு நன்றி யையும் பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதி லும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.
வாலிபர் சங்கம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜிஸ்குமார், மாநிலச் செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில், “சாதி ஆதிக்க வெறியர்களால் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது குறித்து சமூக வலை தளங்களில் வரும் வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, காவல்துறை, அரசு நிர்வாகத்தின் துணையோடுதான் இத்தகைய இழிவான செயலை சமூக விரோதிகள் மேற்கொண் டுள்ளனர். எனவே, அனைவரை யும் கைது செய்து, கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரு வதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், காவல்துறை அதி காரிகள் மீதும் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும், அமைதியை நிலைநாட்டவும், மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கி றார்கள்.