ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 46 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற் கான யாத்திரை கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மண் ரெட்டி (65) எனும் பக்தருக்கு அமர்நாத் யாத்திரை யின் போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள மருத் துவ முகாமுக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்