tamilnadu

img

நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

இந்தியத் தரப்பில் 20 பேர்; சீனத் தரப்பில் 35 பேர் பலியான  மோதல் - எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சு

பிரதமர் அழைப்பு

புதுதில்லி, ஜூன் 17- இந்தியா - சீனா எல்லை பிரச்சனை மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்துள்ள மோதலில் இதுவரை இல்லாத அளவிற்கு வீரர்களின் மர ணங்கள் நேர்ந்துள்ள நிலையில், இதுதொடர் பாக விவாதிக்க பிரதமர் நரேந்திரமோடி, ஜூன்  19 வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டத் திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. சீன எல்லையையொட்டி அமைந்துள்ள இந்தியாவின் லடாக் பகுதியின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே திங்களன்று இரவு இந்திய - சீன துருப்புகளுக்கு இடையே நடந்த கடும் மோதலில் இரு தரப்பிலும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடு களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்திய தரப்பில் முதலில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உள்பட 3 பேர்  பலியாகினர் என ராணுவத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. எனினும் பின்னர் ஒரு அதிகாரி உள்பட மொத்தம் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது.

சீனத் தரப்பிலும் ஏராளமான துருப்பு கள் பலியாகினர் என்ற தகவல் வெளியானது. ஆனால் எத்தனை பேர் என்பது தொடர்பாகவோ அல்லது துருப்புகள் பலியானது தொடர்பாக சீனா அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிட வில்லை. எனினும் சீன தரப்பில் 35 பேர் பலி யானதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் களை மேற்கோள் காட்டி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சீன தரப்பில் 43 பேர் பலியானதாகவும் செய்தி கள் வெளியாகியிருந்தன. முன்னதாக, இரு தரப்பிலும் பரஸ்பரம் கடும் மோதலும், இரு தரப்பிலும் கடும் சேதமும் ஏற்பட்டது என்பதை இந்திய அரசு மற்றும் ராணுவ வட்டாரங்கள் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், புதனன்று, கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலவரம் பற்றியும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் பற்றியும் ஒப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக செவ்வாயன்று இரவு பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராணுவத் தளபதி ஜென ரல் நரவானே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஏற்கனவே உயர்மட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை சீன தரப்பு முறையாக பின்பற்றியிருந்தால், இந்த மோதலும் உயிர் சேதமும் தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்று கூறியது.

நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

இந்நிலையில், எல்லை பிரச்சனை மற்றும் நிலவரம் தொடர்பாக விவாதிக்க ஜூன் 19 வெள்ளியன்று மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. முன்னதாக இந்தியா - சீனா ராணுவத் துருப்புகளுக் கிடையே நடந்த கடும் மோதல், உயிர் சேதம், எல்லையில் நடந்த நிகழ்வுகள் பற்றி நாட்டு மக்களுக்கு முழு உண்மையை பிரதமர் தெரிவித்திட வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கோரியிருந்தனர்.

வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு 

இதனிடையே, லடாக் கல்வான் பள்ளத் தாக்கு மோதல் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து புதனன்று இரு நாட்டு வெளி யுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளி யுறவு அமைச்சர் வாங் யீ -யுடன் தொலைபேசி மூலம் பேசினார். இரு அமைச்சர்களும், தற்போது எழுந்துள்ள பிரச்சனையை நியாய மான வழியில் பேசி தீர்வுகாண்பது என்றும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சம்பந்தப்பட்ட எல்லைப்பகுதி யிலிருந்து படைகளை குறைத்துக் கொள்வது என்றும் ஒப்புக்கொண்டதாக சீன வெளி யுறவு அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளி யிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர்களின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் முதன்மை துருப்புக்களுக் கிடையே மோதல் நடப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய அரசிடம் சீனா வலி யுறுத்தியதாகவும், அடுத்தடுத்து இத்தகைய மோதல் நடப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு எல்லையில் பணி யாற்றும் முதன்மைத் துருப்புக்கள் முற்றிலும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் சட்ட விரோதமாக பரஸ்பரம் எல்லையை தாண்டக் கூடாது என்றும், பரஸ்பரம் ஆத்திரமூட்ட லில் ஈடுபடக்கூடாது என்றும், நிலைமையை சிக்கலாக்கும் விதத்தில் யாரும் தன்னிச்சை யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட தாகவும் கூறப்பட்டுள்ளது. 

(பிடிஐ)